தமுமுக உகாண்டா மண்டலம் சார்பில் இந்த வருடம் (இன்ஷா அல்லாஹ்) வழங்கப்பட இருக்கும் நலத்திட்ட உதவிகள்
1) கசாசே மற்றும் பாலே மாவட்டங்களில் இரண்டு பள்ளிவாசல்கள் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
2) அனாதை குழந்தைகளுக்காக, அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில், இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
3) அனாதை குழந்தைகளுக்கு மேல்நிலைக் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
4) கம்பாலாவில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதியை கண்டறிந்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வது.
5) இரத்தத்தான முகாம் நடத்தப்படுவது.
6) புனித ரமலான் மாதத்தில் அனாதை இல்லங்களுக்கு சென்று உதவிகள் வழங்குவது.
7) இந்திய அசோஷியேஷன்-உடன் இணைந்து சமூக நல்லெண்ண மாநாடு நடத்துவது.
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment